முன்னுரை

எத்தனையோ மகான்களின் எத்தனையோ ஞான நூல்கள் இருப்பினும் அத்தனையும் தன்னகத்தே கொண்டு எல்லாவற்றிலும் சிறந்து விளங்குகிறது திருவருட்பா!

வள்ளல் பெருமான், பொய்புகலேன் புனைந்துரையேன் சத்தியம் சொல்கிறேன் என்று உலகருக்கு தயவுடன் அன்புடன் பண்புரைக்கின்றார். அது மட்டுமா? “நான் உரைக்கும் வார்த்தை எல்லாம் நாயகன் தன் வார்த்தையன்றோ!” என்றல்லவா பறைசாற்றுகின்றார்.

திருவருட்பா பாடினால் கிட்டும் பேரறிவு! உணர்ந்தால் மட்டும் கிட்டும் ஞானம்! எத்தனை முறை படித்தாலும் தெவிட்டாத தெள்ளமுது திருவருட்பா!
பாட்டுவித்தால் பாடுகின்றேன் “என இறைவன் தன்னை பாட பணித்ததால் வள்ளல்பெருமானால் இறைவனுக்கு சூட்டப்பட்ட பாமாலைகளே திருவருட்பா!

திருவருட்பா முழுமையும் கடினமுயற்ச்சி செய்து சென்னை ஆ பாலகிருஷ்ணன் பிள்ளை அவர்கள் 12 தொகுதிகளாக வெளியிட்டார். சன்மார்க்க அன்பர்கள் அகமிக மகிழ்ந்து திருவருட்பா
பாதிப்புச் செம்மல் என்று அழைத்து பெருமைப்படுத்தினார்.

சென்னை அருட்பெருஞ்ஜோதி அச்சகத்தார் முதல் 5 திருமுறை ஒரு தொகுதியாகவும் 6- ஆம் திருமுறை ஒரு தொகுதியாகவும் அழகாக நேர்த்தியாக வெளியிட்டு சன்மார்க்க சங்கத்தவர்களை
மகிழ்வித்தனர்.

சன்மார்க்க தேசிகன் தவத்திரு ஊரன் அடிகளார் சன்மார்க்கத்துக்கே தன்னை அர்ப்பணித்து கொண்ட பெரியவர்.வள்ளல் பெருமான் வாழ்க்கை வரலாற்றை மிக சிறப்பாக நேர்த்தியாக தெளிவாக எழுதி வெளியிட்டு சன்மார்க்க உலகிற்கு பெருந்தொண்டாற்றியுள்ளார்.வள்ளல் பெருமான் அருட்பாக்களை கால முறைப்படி அழகாக தொகுத்து ஆறு திருமுறைகளாக பகுத்து சிறந்த உயர்ந்த பதிப்பாக இரு பகுதியாக வெளியிட்டு மாபெரும் சேவை செய்துள்ளார். நன்கு ஆராய்ந்து பதிப்பித்த அவரின் தொண்டு திருவருட்பா வரலாற்றில் சன்மார்க்க வரலாற்றில் பொன்னெழுத்தால் பொறிக்கத்தக்கது!

சன்மார்க்க உலகமே சன்மார்க்க தேசிகன் தவத்திரு ஊரன் அடிகளாருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளது.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலை கழகம் ஒளவை துரைசாமி பிள்ளை அவர்களை கொண்டு திருவருட்பா முழுமைக்கும் உரை எழுத வைத்து 10 பாகமாக வெளியிட்டுள்ளார்கள்.

திருவருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையம் வடலூரில் தர்மச்சாலை சத்திய ஞான சபை நிர்வாகத்தை நடத்திவருவதோடு வள்ளல் பெருமானின் பாடல்கள் 2 தொகுதி உரைநடை 1 தொகுதி என் 3-ம் சேர்த்து மலிவு விலையில் மக்களுக்கு வழங்கி வருகிறார்கள்.

உலகத்து ஞானம் வழங்கும் புண்ணிய பூமி இந்தியாவில் ஞான ஆரண்யமாம்
தமிழகத்தில் வந்துதித்த திருவருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள்
கருணையால் வாழந்துவரும் அடியேனை ஒரு பொருட்டாக கருதி , தொடர்ந்து தாராளமாக காணிக்கை தந்து சபை வீடு கட்டி தந்து எம்மை ஆதரிக்கும் நெய்வேலி தாய் ஜோதி ஸ்ரீ நிர்மலா தேவி அவர்கள் அன்பால் இந்நூல் வெளியாகிறது . ஞானம் இங்கே பரசியமாகிறது!

திருவருட் பிரகாச வள்ளல் பெருமான் உள்ளத்தில் இருந்து உவகையுடன் உரைப்பார் எனக்கருதி அடியேன் மெய்ஞ்ஞான உரை எழுத சம்மதித்தேன். அடியேனை குருவாக்கி மெய்ப்பொருள் விளக்கம் கொடுத்து ஞான சரியையில் கூறிய படி திருவடி தீட்சை கொடுத்து நாடி வரும் எல்லோரையும் மரணமிலா பெருவாழ்வு பெற அழைத்து செல்கிறார்
வள்ளலார்!

1980 – லிருந்து 28 வருடமாக அடியேனை வழி நடத்தி வாழ்விக்கும் வள்ளல் இராமலிங்கரை பணிவதே தவிர எமக்கு வேறு வேலையில்லை! அவர் இட்ட பணியை செய்வதே எம் கடன்.

யாதும் ஊரே யாவரும் கேளீர்

மரணமிலா பெருவாழ்வு பெற முதலில் உபதேசம்! அடுத்து தவம் செய்யும் முறை உணர்த்தி திருவடி தீட்சை! மெய்ப்பொருளை அறிந்து உணர்ந்து எல்லோரும் இன்புற்று வாழ வழி காட்டுகிறார் வள்ளலார். அடியேன் ஒரு கருவியாக செயல்படுகிறேன்.

” ஆட்டுவிக்கிறார் ஆடுகிறேன்”
அருட்பா படித்தால் அறிவில் தெளிவு !
அருட்பா படித்தால் அறியலாம் ஆண்டவனை!
அருட்பா படித்தால் அமைதி கிட்டும்!
அருட்பா படித்தால் ஆனந்தம் பெறலாம்!
அருட்பா படித்தால் ஆறறிவு துலங்கும்!
அருட்பா படித்து உணர்ந்தால் ஞானி!
படியுங்கள் – உணருங்கள் – தவம் செய்யுங்கள்!
கிட்டும் மரணமிலா பெருவாழ்வு!

என்றும் உண்மையுள்ள
சிவசெல்வராஜ்

உள்புகு முன்!
“திருவருட்பா ” எனும் அதி உன்னதமான , ஞான களஞ்சியமான இந்நூலை இயற்றியவர் ….

Share

Leave a comment