காமத்திற்கு அடிமையாகாமல் இருப்பது எப்படி?

இந்த உலகில் எல்லோருக்குமே பெரிய சவாலாக இருப்பது காமமே. பெரிய பெரிய சாமியார்கள் எல்லாம் கூட தடம் புரண்டு போகிறார்கள். சாமானியன் எம்மாத்திரம். காமம் உள்ளவன் கனவிலும் கடவுளை காண மாட்டான். மனிதன் காமத்திலிருந்து விடுபட்டு, ஒழுக்கத்துடன் வாழ்ந்து இறைவனை அடைய வழி கூறி அருளியுள்ளார்கள் ஞானிகள். இக்கட்டுரையில் அவைகளை காண்போம். இக்கட்டுரை எங்கள் குருநாதர் திரு சிவசெல்வராஜ் அய்யா அவர்கள் ஞானிகள் அருளால் எழுதி வெளியிட்டுள்ள மெய்ஞ்ஞான புத்தகங்களில் இருந்து தொகுக்கப்பட்டது.

மனதில் எழும் மும்மலமான ஆணவம், கன்மம், மாயையின் செயல் ஆசை ,காமத்தில் தான் உதயமாகிறது. “மாயை” மனிதனின் கர்ம வினைப்படி அவனை ஆட்டுவிக்கிறது. சிக்கி விடாதே சீரழிந்து போவாய். ஆனால் மனிதன் காம வசப்பட்டு , மாதரின் மாய வலையில் அகப்பட்டு உழன்று உடலை புண்ணாக்கி மனதை கெடுத்து சீரழிவர்.சாவார் காம கண் கொண்டவன் காமாந்தகன் கடவுளை காணான். காம வசப்பட மனிதன் கண்ணிருந்தும் குருடனாய், செவியிருந்தும் செவிடனாய் வாழ்கிறான். நல்ல சறகுருவை நாடி வேத புராண உபதேசம் செவியில் கேட்க மாட்டான். மெய்ஞ்ஞானம் உணராமல் உடம்பை அழிகின்ற உடம்பு தானே சாகும் வரை இஷ்டம் போல் வாழலாம் என முட்டாள்தனமாக கருதி தன் உடலை புண்ணாக்கி கெட்டு குட்டி சுவராகி செத்தும் போவான்.
“அழியுடம்பை அழியாமையாக்கும் வகையறியீர்” என ஒரு ஞானி மனிதனை எச்சரிக்கிறார். ஆம் மானிடர் யாக்கை அழியக்கூடியது தான் மனம் போன படி வாழ்ந்தால்.

காமம் என் ஏற்படுகிறது?

“இலையா மிடையி லெழுகின்ற காமம்” – திருமந்திரம் பாடல் 2141

மனிதன் பிறக்கிறான் – குழந்தை. ஒன்றுமே தெரியாது. பச்சை மண். எந்த குசவன் கையில் அகப்படுகிறதோ அந்தவித மண் பாண்டமாகிறான். ஆத்திக குடும்பத்தில் பிறந்தது ஆன்மிக சூழலில் வளர்வது ஆண்டவனை அறிய உணர வழிகாட்டும். நாத்திக குடும்பத்தில் பிறப்பது தான் பெரிய மேதை என கருதி முட்டாள்தனமாக வாழ்வது அந்த சூழ்நிலை இதுவரை யாரும் உருபட்டதேயில்லை. குழந்தை வளர்ந்து பாலனாகி பின் வாலிபனாகிறான். அப்போது நிகழும் உடல் வளர்ச்சி , பசி தாகம் தூக்கம் போல் காமமும் ஏற்படுகிறது மனிதனுக்கு. அந்த பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட வாலிப பிராயத்திலே ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏற்படும் இந்த இனக்கவர்ச்சி , காமம் கட்டுப்பாடுடன் கவனிக்க வேண்டிய ஒன்றாகும். வாழ்க்கையில் இடைப்பட்ட காலத்தில் – வாலிபத்தில் வந்து வயோதிகத்துக்கு முன்னால் முடிந்து விடுவது மட்டுமல்ல. நமது உடலில் இடையில் ஏற்படும் – இடுப்பு பிரதேசத்தில் ஏற்படும் உணர்வாலும் காமம் தலை தூக்குகிறது.

இந்த இடையில் ஏற்படும் மாற்றமே , இடைப்பட்ட காலமே ஒரு மனிதன் பண்படும் காலமாகும். நமது முன்னோர்கள் மனித வாழ்வை மேம்படுத்த சமுதாய அமைப்பை ஏற்படுத்தி ஒழுக்கம், பண்பை போதித்தார்கள். பக்தியை ஊட்டினார்கள். இயல் இசை நாடகமென முத்தமிழாலும் இறைவனை வழிபட , உணர வழிகாட்டினார்கள். மனிதன் , மனித பிறப்பெடுத்ததோடு நின்று விடாமல் , மிருகம் போல வாழாமல் மனிதனாக வாழவும் வழிகாட்டினார்கள்.

மனிதன் எப்போது மனிதனாவான்? பஞ்சமாபாதகமான பொய், கொலை, களவு, கள், காமம் இவைகளை தன் வாழ்வில் சேர்க்காமல் இருந்தால் தான் மனிதன். மனதில் எழும் மும்மலமான ஆணவம், கன்மம், மாயையின் செயல் ஆசை , காமத்தில் தான் உதயமாகிறது. “மாயை” மனிதனின் கர்ம வினைப்படி அவனை ஆட்டுவிக்கிறது. சிக்கி விடாதே சீரழிந்து போவாய். காமம் மனித இயல்பு சீராக்கிக்கொள். திருமணமாகி ஏகபத்தினி விரதனாய் வாழு. மனைவியை காமக்கிளத்தி என்றும் சொல்வர். மனைவியோடு மட்டும் காமம் வைத்துக்கொள். பிற உலக மாதரெல்லாம் தாய் என்று கொள்.

மனைவியோடு மட்டும் மாதம் இருமுறை உறவு கொள்ளலாம். விந்துபலமே விந்துநாதம் பெற பேருதவியும் ஆகும். ஜாக்கிரதை. உடல் நலமாக , பலமாக, சீராக காம வசப்படாமல் இருக்க வேண்டும். காமத்தை ஆபாசமாக்கி விடாதீர்கள் அழிந்து தான் போவீர்கள். காமம் சாப்பாட்டில் சேர்க்கும் ஊறுகாய் போல இருக்க வேண்டும். இலேசாக தொட்டு கொள்ளலாம். ஊறுகாயை உணவாக கொண்டால் உயிர் தாங்காது. திருமணமாகும் வரை ஆணும் பெண்ணும் ஆன்மீக உணர்வோடு வாழ வேண்டும். பக்தி ஞான ஈடுபாடு உடையவர்களாக திகழ வேண்டும். நமது பாரத பண்பாடு இதுவே. திருமணமான பின்னரே கணவன் மனைவி கருத்தொருமித்து இல்லற நெறியோடு இறை உணர்வோடு வாழ வேண்டும். சற்புத்திரர் புத்திரிகளை பெற்று பக்தியை ஊட்டி பண்போடு வளர்க்க வேண்டும். பாலபிராயமுடியு முன்னே தக்கதொரு ஆன்மிக குருவிடம் சேர்ப்பித்து பக்தி ஞான பாடம் படிக்கச் செய்ய வேண்டும். பிள்ளைகளை பெற்றால் போதாது?! தக்கதொரு சன்மார்க்க குருவிடம் உபதேசம் பெறச் செய்ய வேண்டும். மாத , பிதா தன் பிள்ளைகளுக்கு கண்டிப்பாக குருவை காட்ட வேண்டும். குருவை காட்டாத பெற்றோர் வீண்.

திருமணத்திற்கு பின் தான் காமம். அதுவரை பக்தியுடன் ஒழுக்கத்துடன் பகவானை பணிய வேண்டும். பண்பட்ட வாழ்க்கை மனைவியோடு மட்டும் மாதம் இருமுறை உறவு கொள்ளலாம். விந்துபலமே விந்துநாதம் பெற பேருதவியும் ஆகும். ஜாக்கிரதை. உடல் நலமாக , பலமாக, சீராக காம வசப்படாமல் இருக்க வேண்டும். காமத்தை ஆபாசமாக்கி விடாதீர்கள் அழிந்து தான் போவீர்கள். காமம் சாப்பாட்டில் சேர்க்கும் ஊறுகாய் போல இருக்க வேண்டும். இலேசாக தொட்டு கொள்ளலாம். ஊறுகாயை உணவாக கொண்டால் உயிர் தாங்காது. திருமணமாகும் வரை ஆணும் பெண்ணும் ஆன்மீக உணர்வோடு வாழ வேண்டும். பக்தி ஞான ஈடுபாடு உடையவர்களாக திகழ வேண்டும். நமது பாரத பண்பாடு இதுவே.

திருமணமான பின்னரே கணவன் மனைவி கருத்தொருமித்து இல்லற நெறியோடு இறை உணர்வோடு வாழ வேண்டும். சற்புத்திரர் புத்திரிகளை பெற்று பக்தியை ஊட்டி பண்போடு வளர்க்க வேண்டும். பாலபிராயமுடியு முன்னே தக்கதொரு ஆன்மிக குருவிடம் சேர்ப்பித்து பக்தி ஞான பாடம் படிக்கச் செய்ய வேண்டும். பிள்ளைகளை பெற்றால் போதாது?! தக்கதொரு சன்மார்க்க குருவிடம் உபதேசம் பெறச் செய்ய வேண்டும். மாத , பிதா தன் பிள்ளைகளுக்கு கண்டிப்பாக குருவை காட்ட வேண்டும். குருவை காட்டாத பெற்றோர் வீண். திருமணத்திற்கு பின் தான் காமம். அதுவரை பக்தியுடன் ஒழுக்கத்துடன் பகவானை பணிய வேண்டும். பண்பட்ட வாழ்க்கை அருள்வான் ஆண்டவன்.

கடவுளே என்றிருந்தால் , பெண்களையெல்லாம் தாயாக பார்த்தால் காமத்திலிருந்து தப்பிக்கலாம். அபிராமி பட்டர் எல்லா பெண்களையும் தாயாக பார்த்தார்! எல்லா ஞானிகளும் காமத்திலிருந்து மீண்டதால் தான் ஞானம் பெற்றனர். காமத்தில் மூழ்கி கிடந்த அருணகிரி நாதர் காமத்தை விட்டார் – கடவுளை தொட்டார்.

காமம் விலக கடவுளை நினை.

கடவுளை பற்றி பேசும் சத்சங்கத்தில் சேர்.

அசைவ உணவு காமத்தை உண்டாக்கும். சைவ உணவே சன்மார்க்க உணவு. சாத்விக குணம் சைவ உணவு உண்டால் தான் வரும்.

அன்பு காட்டு. ஆசை கொள்ளாதே. காம உணர்வுக்கு அடிமையாகாதே.

போகர் சித்தர் பெண்ணோடு போகம் பண்ணியவரல்ல. பரம்பொருளோடு புருசோத்தமனான இறைவனோடு எப்போதும் கலந்திருந்தவர். அதனால் தான் போகர்.

“பிறந்த இடத்தை நாடுதே பேதை மட நெஞ்சம் ! கறந்த இடத்தை நாடுதே கடைக்கண்” என்றார் பட்டினத்தார். இந்த பாட்டிற்கு படித்த முட்டாள்கள் எல்லாம் ஆபாசமாக பொருள் கொண்டனர். பட்டினத்தார் மாபெரும் ஞானியல்லவா? அவர் உயர்ந்த ஞானத்தை அல்லவா சொல்லியிருப்பார். அதை சிந்திக்க வேண்டாமா?அடியேன் 1992 ல் முதன் முதலாக எழுதிய “கண்மணி மாலை” நூலிலேயே இதன் ஞான விளக்கத்தை சொல்லியிருக்கிறேன். திருஅருட்பிரகாச வள்ளலார் அருளால் அடியேன் எழுதி வெளியிட்டேன். இதுவே மெய்ஞ்ஞானம்.

பிறந்த இடம் – நாம் பிறந்தது பரமாத்மாவிலிருந்து அல்லவா. நம்மை பேதை என்கிறார் – பெண்ணின் பருவம் இது. ஜீவாத்மாவான நாம் பெண் அம்சம் பேதை பெண். சீவனாகிய பெண் பேதையாகிய நாம் நாட வேண்டியது எப்போதும் சிவனாகிய பரமாத்மாவாகிய நாம் பிறந்த இடத்தையே. கறந்த இடம் – நாம் கண்மணி ஒளியை ஞான ச ற் குரு மூலம் தூண்டி பின் தொடர்ந்து தவம் செய்ய செய்ய நம் கண் கடைசியில் உள்ளே போய் சேரும் இடம் கடைக்கண் இடம் ஆத்மஸ்தானம் அங்கே போனால் கிட்டும் அமுதம். அந்த அமுதம் சாப்பிடவே ஜீவாத்மாக்களெலாம் துடித்து கொண்டிருக்கிறது. கடைசியில் கண் போய் கடைக்கண் சேர்ந்து நாடினால் தான் அமுதம் கிட்டும். அதை தான் பட்டினத்தார் அழகாக பாடி அருள்கிறார்.

காமம் நிறைந்த மனிதனுக்கு , மனம் படைத்தவனுக்கு எல்லாமே ஆபாசமாகாத் தான் தெரியும். கடவுளை சதா சர்வ காலமும் சிந்தையில் நிறுத்தி தவம் செய்பவர் எங்கும் எதிலும் காண்பர் கடவுளை. அறிவுடையோர் எப்பொருள் யார் சொன்னாலும் மெய்ப்பொருளாகவே காண்பார். அறிவு தானே ஞானம்.

“காமமகற்றிய தூயனடி சிவகாமி நேயனடி” என்று வள்ளலார் பாடுகிறார். நாம் சிவகாமி அன்னையை சரணடைய வேண்டும். சதாகாலமும் சிவத்தை காமுற்றிருப்பவளே சிவகாமி. நமக்கு சிவத்தை காமிக்கின்றவளே , காண்பிக்கின்றவளே சிவகாமி. அந்த சிவகாமி தான் – தாய் – வாலை- கன்னி “யா” குமரி. தாயை பணிந்தால் சரணடைந்தால் காமத்திலிருந்து விடுபடலாம். காமம் அகற்றி அருள்வதால் அவள் காமாட்சி. பணியுங்கள். ஒழுக்கமான பண்பான வாழ்வருள்வாள் நமக்கு உயிர் தந்த அன்னை வாலை .

திருச்சிற்றம்பலம்.

Share

1 Comment

  • m.sathya sindaram
    Posted December 24, 2016 7:19 am 0Likes

    hi sirComment

Leave a comment