துயரறு சுடரடி தொழுது எழு

துயரறு சுடரடி தொழுது எழு

உயர்வற உயர்நலம் உடையவன் யவன்? அவன்

மயர்வற மதிநலம் அருளினன் யவன்? அவன்

அயர்வறும் அமரர்கள் அதிபதி யவன்?அவன்

துயரறு சுடரடி தொழுது எழு என் மனனே.

            -ஸ்ரீ நம்மாழ்வார் 

என்மனமே எம்பெருமானைக் காட்டிலும் உயர்ந்த கல்யாண குணங்கள் எவரிடமும் 

கிடையாது? தன்னை நிந்திப்பவர்களுக்கும் சரணடைந்தவர்களுக்கும் அருள் புரியும் 

உயர் நலம் கொண்டவன்! என்னிடமிருந்த மந்த புத்தியை அகற்றி சிந்தைக்கு விருந்தாகும்

ஞானத்தையும் பக்தியையும் அருளியவனும் அவன்தான்! நமது துயரங்களை போக்கி பரம பதம் 

கிட்ட செய்யும் பிரகாசமான ஒளி பொருந்திய அவனது திருவடிகளை தொழுது பிறவி 

கடலில் இருந்து கரை ஏறுவாயாக ! கண்ணன் கழலடி தான்   திருவடிதான் நம்கண்கள்! 

பற்றுங்கள்! நம்மை பற்றி இருக்கும் மும்மலப்பற்று கழன்று விடும்! பரிசுத்தனாகலாம்! 

கண்ணனை சரணடையுங்கள் கடைத்தேறலாம்! காத்தருளவான்!  

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top