பற்றின் திறம் பகர்தல்

வாணரை விடையூர் வரதனை ஒற்றி
    வாணனை மலிகடல் விடமாம்
ஊணனை அடியேம் உளத்தனை எல்லாம்
    உடையனை உள்கிநின் றேத்தா
வீணரை மடமை விழலரை மரட்ட
    வேடரை மூடரை நெஞ்சக்
கோணரை முருட்டுக் குறும்பரைக் கண்டால்
    கூசுவ கூசுவ விழியே

வெள்ளை விழியாகிய நந்தியின் மேல் அமர்ந்தவன்! ஒற்றிவாணன் –
கண்மணியில் ஒற்றி உள் இருக்கும் ஒளி! பாற்கடலாகிய வெள்ளை
விழி தவத்தால் கருவிழி விஷமாகிய மும்மலத்தை உண்பவன் சிவம்.
உள் ஒளி! எல்லாம் உடையவன் எங்கும் நிறைந்தவன் அவனை உள்ளே
நிலை நிறுத்தி தவம் செய்தாலே நாம் உய்யும் வழியாகும்! பரம் பொருளை
காணவே நம் கண்கள்! அதெல்லாமல் உலகில் உள்ள வஞ்சகர்களை காண
நம் கண் கூசவேண்டாமா? தீயதை பார்க்காதே! தீயதை கேட்காதே! தீயதை
பேசாதே!

Share

Leave a comment