நெஞ்சறிவுறூஉ

நெஞ்சறிவுறூஉ


என்ன தன்றுகாண் வாழ்க்கையுட் சார்ந்த
இன்ப துன்பங்கள் இருவினைப் பயனால்
மன்னும் மும்மல மடஞ்செறி மனனே
வாழ்தி யோஇங்கு வல்வினைக் கிடமாய்
உன்ன நல்அமு தாம்சிவ பெருமான்
உற்று வாழ்ந்திடும் ஒற்றியூர்க் கின்றே
இன்னல் அற்றிடச் செல்கின்றேன் உனக்கும்
இயம்பி னேன்பழி இல்லைஎன் மீதே


ஆணவம் கன்மம் மாயை என்னும் மும்மலங்களால் சூழப்பட்ட மனமானது அவரவர் செய்து வைத்த வினைகளின் படி உடல் எடுத்து இன்பத்தையும் துன்பத்தையும் அனுபவிக்கின்றது! நம் வாழ்வே வினையால் ஏற்படுவதே! “வினைபோகமே ஒரு தேகம் கண்டாய் தினைப் போதும் நில்லென்றால் நில்லாய்”என்ற பாடல் உணர்த்துவதும் இதைத்தானே! நம் ஒற்றியூராகிய கண்மணியில் வாழ்கின்ற சிவம் – ஒளியை நாம் உன்னி உன்னி தவம் செய்தால் அதனால் ஏற்படும் ஒளி பெருகி வினையாகிய மறைப்பு அற்றுவிடும்! நான் போகிறேன் நீங்களும் வாருங்கள் என வள்ளலார் அழைக்கிறார்,

ஒன்பதாகிய உருவுடைப் பெருமான் ஒருவன் வாழ்கின்ற ஒற்றியூர் – பாடல் 2

நமது வலது கண் இடது கண் உள்ளே உள்ள அக்னி ஆக முக்கண். ஒருகண் வெள்ளை விழி கருவிழி கண்மணி என மூன்று உருகொண்டது. 3 கண்ணும் சேர்ந்து 9 உரு கொண்டது. வலது கண்ணும் இடது கண்ணும் சேர்ந்தாலே மூன்றாவது கண் தோன்றும்.

-ஞான சற்குரு சிவசெல்வராஜ்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top