எண்ண தேங்கல்

எண்ண தேங்கல்

 

போதுகொண் டவனும் மாலும்நின் றேத்தும்
புண்ணிய நின்திரு அடிக்கே
யாது கொண் டடைகேன் யாதுமேற் செய்கேன்
யாது நின் திருவுளம் அறியேன்
தீது கொண் டவன்என் றெனக்கருள் சிறிதும்
செய்திடா திருப்பையோ சிறியோன்
ஏதிலன் செயலொன் ரிலையெனக் கருதி
ஈவவையோ தணிகை வாழ் இறையே

 

நான்முகனும்  திருமாலும் போற்றும் புண்ணியமே
இறைவா சுயம் ஜோதியே உன் திருவடிக்கே – என்
கண்மணியில் ஒளிர்பவனே உன்னை அடைய நான் என்ன
செய்வேன்? எதை தருவேன்? உன் திருவுளம் அறியேனே!
பாவிப் பிறவி என என்னை அருளாது விடிடாதே!
தகுதியில்லதவன் என்று என்னை தள்ளி விடாதே! இறைவா
என்ப்போற்றுகிறார் கதறுகிறார் வள்ளல் பெருமான்!

தணிகை வேற்பினுள் ஒளிரருள் விளக்கே – பாடல் 2

நம் மனம் தணியும் கண்மணி குகையுள் ஒளிர்ந்து அருள்புரியும்
விளக்கே அருட்பெருஞ்சோதி அற்புத கடவுளே என்கிறார்
வள்ளலார்!

உன் பொன்னான திருவடி நிழல் கிடைத்தாலே வாழ்வேன்!

ஞானசற்குரு சிவசெல்வராஜ்
திருவருட்பாமாலை

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top