திருவடி

இறைவன்திருவடி நம் கண்கள். நம் தலையின் உள் மத்தியில் துலங்கும் நம் உயிர் ஒளியே நம் கண்களில் துலங்குகிறது. ஆத்மாவிலிருந்து இறை ஒளி நேரடியாக வெளிப்படும் உடலில் உள்ள இடம் நம் கண்கள். மனம் வெளிப்படும் இடம் அதுவாகும். முக்தி அடைய அல்லது கடவுளுடன் ஒன்றிணைவதற்காக அனைத்து துறவிகள்/சித்தர்கள் தியானம் செய்த இடம் இதுவாகும்.

இறைவன் திருவடியான நம் கண்களை சூரியன் சந்திரன், 8 2, அ உ, சிவம் சக்தி, சங்கு சக்கரம் புருவமத்தி,இருதயம் என்று பரிபாசையாக குறிப்பிடபடுகிறது. கண்ணன், கண்ணம்மா, கிருஷ்ணமணி, ஆலிலை மேல் நாராயணன், சின்மயம் எண்று பரிபாசையாக சொல்வது இறைவன் திருவடியாகிய கண்களில் துலங்கும் உயிர் ஒளியே.

Leave a comment